If Anybody want to add or update temple details means please mail me at marthandamarea@gmail.com we will put it on this site.

Wednesday 6 August 2014

Sri Bhagavathi Amman temple kanyakumari | அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் கன்னியாகுமரி


மூலவர்:தேவிகன்னியாகுமரி - பகவதி அம்மன்
 உற்சவர்:தியாக சவுந்தரி, பால சவுந்தரி
 அம்மன்/தாயார்:-
 தல விருட்சம்:-
 தீர்த்தம்:பாபநாசதீர்த்தம்
 ஆகமம்/பூஜை:-
 பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:குமரிகண்டம்
 ஊர்:கன்னியாகுமரி
 மாவட்டம்:கன்னியாகுமரி
 மாநிலம்:தமிழ்நாடு
 

பாடியவர்கள்:
   
 - 
   

 திருவிழா:
   
 புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாள் வைகாசி விசாகம் - 10 நாள் - தேரோட்டம், தெப்போற்ஸவம் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும். 
   

 தல சிறப்பு:
   
 இது முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென்கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலா தலம். கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பவுர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம். 1984ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது. காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2 -ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். 
   

திறக்கும் நேரம்:
   
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   

முகவரி:
   
 அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி - 629702, கன்னியாகுமரி மாவட்டம். 
   

போன்:
   
 +91- 4652 - 246223 
   

 பொது தகவல்:
   
 கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக, பிரமாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது. மிகவும் கலைநுணுக்கத்துடன் கூடிய இச்சிலையை அருகில் சென்று பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது.

கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை காண்போர் கண்களை வியக்க வைக்கும். சுசீந்திரம் கன்னியாகுமரியின் வடக்கே 10 கி.மீ,. தொலைவில் உள்ளது.
 
   
 

பிரார்த்தனை
   
 கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது. இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும். 
   

நேர்த்திக்கடன்:
   
 அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்தி கடன்களாக செய்கின்றனர். இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற மூதாதையர்களுக்கு காரியம் செய்ய எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள். 
   

 தலபெருமை:
   
 விவேகானந்தர் நினைவு மண்டபம் : குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.

1892ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

பரசுராமர் குமரிதெய்வ உருவை இவ்விடத்தில் அமைத்து வழிபட்ட தலம்.

பராசக்தியுறையும் கோயில் இந்தியா முழுமையும் பரந்த புகழுடையது.

கடல் முனையில் இருந்தாலும் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம்.

முன்பிருந்த கோயில் கடல் கொண்டு விட்டது. இப்போதிருப்பது இரண்டாவதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

பிதுர்கடன் கழிக்க ஏற்ற தலம். வடஇந்தியர்கள் வருகை அதிகம் உள்ள கோயில்.
 
   

  தல வரலாறு:
   
 முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர் அடக்கியாண்டனர். தர்மம்  அழிந்து அதர்மம் தலைதூக்கியது. தீமையும். பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். விண்ணவரை ஒட்டித் தூயோர்க்கும் முனிவருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள். திருமால் தீத்திறங்கொண்ட பாணாசுரனைப் பரசக்தியால் மட்டுமே கொல்ல முடியும் ஆகவே தேவர்கள் பராசக்தியை அணுக வேண்டும் என்றார். அதன் படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒர் பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் சக்திதேவி வெளிப்பட்டுப் பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து, ஒழுங்கும் அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள்.

அன்று முதல் அவள் கன்னியா குமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள். நாள் செல்ல செல்லக்  கன்னிதேவி மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரம் என்னும் இடத்திலுள்ள இறைவன் சிவபெருமான் அவள் மீது காதல் கொண்டார். அவருக்கு அவளைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அசுரர் தலைவன் ஒரு கன்னியால் தான் கொல்லப்படுவான் என்று பிரம்மதேவனால் விதிக்கப்பட்டிருந்தமையால், இத் திருமணம் நிகழுமாயின், பாணாசுரன் அழிவுக்குரிய வாய்ப்பு கெட்டுவிடும் என்று நாரதர் உணர்ந்தார். ஆகவே அவர் இத்திருமணம் நிகழாதிருப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கருதலானார். அவர் பராசக்தியையும், சிவபெருமானையும் நேரில் சென்று கண்டு, திருமணம் குறிப்பிட்ட ஒர் நாளில், நள்ளிரவில், ஒரு நல்வேளையிலேயே நிகழ வேண்டும், அதற்கு ஆயத்தமாக இருங்கள் என கூறினார். அவ்வாறே சிவபெருமான் குறித்த இரவில், நல்லநேரம்  தவறிவிடக் கூடாதெனக் கருதிக் கன்னியா குமரிக்குப் புறப்பட்டார். போகும் வழியில், வழுக்கம் பாறை என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் ஒர் சேவல் உருக்கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்து விட்டதெனத் தவறுதலாகப் புரிந்து கொண்ட சிவபெருமான் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார். தேவியும், அதன் பின் என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து, தவத்தை தொடர்ந்தாள்.

திருமணத்திற்கென்று செய்யப்பட்ட உணவு பொருள்யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும், வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாகக் கிடப்பதைக் காணலாம். இவ்வாறு தேவி கடுந்தவமிருக்கும் போது, ஒரு நாள், பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால்,  தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். இத்தகைய தருணத்தை  எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில், தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றொழித்தாள். தேவர் யாவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தியருளியபின் மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள்.
 
   

சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: சில பவுர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம். 
விஞ்ஞானம் அடிப்படையில்: காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது.

 
Moolavar:Bhagavathi Amman (Devi Kanyakumari)
 Urchavar:Thyaga Soundary, Balasoundary
 Amman / Thayar:-
 Thala Virutcham:-
 Theertham:Papanasa Theertham
 Agamam / Pooja:-
 Old year:1000-2000 years old
 Historical Name:Kumarikandam
 City:Kanyakumari
 District:Kanyakumari
 State:Tamil Nadu
 



   
 - 
   

 Festival:
   
 10 day Navarathri festival in the Tamil month of Purattasi (September-October). 10 day Vaikasi Visakam during May-June with a Boat Festival. The crowd will exceed ten thousands. During these festival days, the Goddess will be taken in procession both in the morning and evening. On the ninth day the Goddess will be taken round the water on the western part in a boat beautifully decorated. 
   

 Temple's Speciality:
   
 Probably, Kanyakumari is the only place in the world where a confluence of three seas could be seen. This is the point where the Indian Ocean in the South, the Arabian Sea in the West and the Bay of Bengal in the east meet together. The nature’s beauty is in its full form here. During the full moon days, devotees and tourists can enjoy simultaneously the setting of the sun in the west and the rising of the moon in the east. 
   

Opening Time:
   
 The temple is opened from 6.00 a.m. to 11.00 a.m. and 4.00 p.m. to 8.00 p.m. 
   

Address:
   
 Sri Bhagavathi Amman Temple, Kanyakumari 
   

Phone:
   
 +91- 4652 - 246223 
   

 General Information:
   
 
Kanyakumari is in the southernmost point of India – called Cape Comerin during the pre-independence days.  The reputation of this temple is widely known to all throughout India and the world. Though the temple is on the sea shore, the water in the well in the temple is sweet and not salty.
 
   
 

Prayers
   
 
Probably, Kanyakumari is the only place in the world where a confluence of three seas could be seen.   This is the point where the Indian Ocean in the South, the Arabian Sea in the West and the Bay of Bengal in the east meet together.  The nature’s beauty is in its full form here.  During the full moon days, devotees and tourists can enjoy simultaneously the setting of the sun in the west and the rising of the moon in the east.
 
   

Thanks giving:
   
 People use to light lamps in the temple and offer new saris to the goddess besides usual abishek and archanas. People bathe in the sea and offer Tarpan to the departed ancestors for their salvation. 
   

 Greatness Of Temple:
   
 
Gandhi Mandap:In the year 1948 the ashes of the Father of the Nation Mahatma Gandhi was immersed in the sea confluence in Kanyakumari.  Before immersion, homage was paid to the ashes in the pot with flowers.  Gandhiji’s disciple Acharya Kripalani took efforts for the construction of a memorial for him. The foundation stone was laid in 1954 and a beautiful Mandap came into being in the year 1956.  It is noteworthy that sunlight falls on the Peeta in the Mandap on the 2nd October of the year, the day of Mahatmaji’s birth.

Vivekananda Memorial: There are two great rocks in the eastern direction in the sea.  The bigger one measures about 3 acres and is 55 feet above the sea. There is also a symbol on this rock in the shape of a foot which devotees believe to be that of the Goddess.  In the year 1892, Swami Vivekananda visited Kanyakumari, spent his time on the rock in deep medidation.  A Mandap is constructed on this rock in his memory.

Aiyan Thiruvalluvar: On the other rock, the statue of Thiruvalluvar is installed representing the minute skills in sculpture.  The tall statue is very beautifully designed and stands so majestically as if conversing with tides.  Boat conveyance is available to go and see the statue closely.  Indeed, a pleasant wonder.  

Monday 4 August 2014

அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில் குமார கோயில் | Sri Kumaraswami temple Kumaracoil


மூலவர்:குமார சுவாமி
உற்சவர்:மணவாளகுமரன்
அம்மன்/தாயார்:-
தல விருட்சம்:வேங்கை மரம்
தீர்த்தம்:தெப்பக்குளம்
ஆகமம்/பூஜை:-
பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:வேள்விமலை
ஊர்:குமார கோயில்
மாவட்டம்:கன்னியாகுமரி
மாநிலம்:தமிழ்நாடு



-
 திருவிழா:
வைகாசி விசாகத் திருவிழா - 10 நாள் ஆவணி கடைசி வெள்ளி - புஷ்பாபிஷேகம் - 1 நாள் பங்குனி திருக்கல்யாணம் - 7 நாள்.
 தல சிறப்பு:
வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது.மூலவர் முருகப்பெருமான் 10அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:
அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை - 629 175, நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.

போன்:
+91-4651 - 250706, 233270

 பொது தகவல்:
மிகவும் பழமையான இக்கோயிலில் மூலவர் தென்கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். 10 அடி உயர சிலையாக சுவாமி பிரமாண்டமாக காட்சி தருவது சிறப்பு. சுவாமியின் காதுகள் நீண்டு காணப்படுகிறது. இதை வைத்து பார்க்கின்ற போது இந்த சுதை புத்தர்கால கட்டத்தை சேர்ந்தது என்றும் கூறுகிறார்கள். சுதை சாதாரண கல் வகையை சேர்ந்ததாக  இல்லாமல் மிகவும் உறுதியுடன் இருப்பதாகவும் அர்ச்சகர்கள் கூறுகிறார்கள்.

பிரார்த்தனை
இத்தலத்தில் வேண்டும் அனைத்து காரியங்களும் நிறைவேறுகின்றன. வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கியருளும் கடவுளாக வேலிமலைக் கடவுள் திகழ்கிறார். திருமணம், குழந்தை பாக்கியம், வியாபார விருந்தி, கல்வி ஞானமும், உடல்பலமும் கொடுக்கும் தெய்வமாக திகழ்கிறார். மனபலம், உடல் பலம் ஆகியவை தருபவராகவும், மனதுக்கு அமைதியும் தரும் சிறப்பு பெற்றவராகவும் உள்ளார். இங்குள்ள இறைவனை மலையேறி வணங்கினால் நம் உடற்பிணியெல்லாம் விட்டு விலகும் என பக்தர்கள் கூறுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:
மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

 தலபெருமை:
கேரள எல்லையில் உள்ள மிக முக்கிய முருகன் கோயில்.கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.குறவர் படுகளம் - வள்ளி தோழியரோடு தினைப்புனம் விளையாடிய இடமாக கருதப்படுகிறது.

  தல வரலாறு:
முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் இருக்கும் 6 படை வீடுகளோடு ஏழாவது படைவீடாக இணைந்திருக்க வேண்டிய திருக்கோயில். குமரி மாவட்டத்தின் இந்த பகுதி கேரள மாநிலத்தோடு இருந்துவிட்டது. மேலும் நம்பி ராஜன் வாழ்ந்த இடமாக இது இருக்கிறது. முருகப்பெருமான் இங்குதான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மிகவும் பழமையான இக்கோயிலில் தென் கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோயில் அப்பகுதியில் மிகப்பிரபலமாகக் கருதப்படுகிறது.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது.மூலவர் முருகப்பெருமான் 10அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.






Moolavar:Kumaraswami
Urchavar:Manavalakumaran
Amman / Thayar:-
Thala Virutcham:Vengai
Theertham:Float tank – Teppakulam
Agamam / Pooja:-
Old year:500-1000 years old
Historical Name:Velvi Malai
City:Kumaracoil
District:Kanyakumari
State:Tamil Nadu

-

 Festival:
10 day Vaikasi Visaka festival, last Friday Pushpabishekam in Avani in August-September; and seven day Panguni wedding festival are the festivals celebrated in the temple.

 Temple's Speciality:
Presiding deity Lord Muruga is 10 feet tall standing majestically. It is said Valli Kalyanam –Lord Muruga’s wedding with Valli- took place here.

Opening Time:
The temple is open during normal hours of the day

Address:
The Executive Officer, Sri Kumaraswami Temple, Velimalai.

Phone:
+91-4651 - 250706, 233270



Prayers
Devotees seek the grace of Lord Muruga for wedding, child, education, professional progress and health.  Lord Muruga takes care of His devotees granting all they want.  The Hill Lord grants peace of mind and all happiness to those to come to Him.

Thanks giving:
Tonsuring, offering coins equal to one’s weight called Tulabaram, offering pudding-Pongal, dressing the Lord with sandal paste, performing abishek with Panchamirtha, milk and arranging feeding-annadhanam, lighting ghee lamps, carrying milk pots and Kavadi are the prayer commitments followed in the temple.

 Greatness Of Temple:
This is a famous Lord Muruga temple situated at the Kerala-Tamilnadu border. Gruel offered in the temple is considered as an effective cure for many diseases. It is also believed that this was the place where Valli played with Her friends while taking care of the Thinai – a crop – fields and the region ruled by Nambirajan, the adopted father of Valli.  People also believe the place was the one where Lord Muruga stood as the Vengai tree for Valli.  This is a very ancient temple.  Presiding Lord is on the southeast side with Mother Valli.  The idol is 10 feet tall.  The ears of the presiding Lord being long, it is believed that the structure belongs to Buddhist period.  The stone too is of a very hard type.

  Temple History:
Many wish that this temple should be the seventh Padai Veedu (army camp) of Lord Muruga along with six in Tamilnadu.  This was earlier in Kerala.  Many believe that Nambirajan the adopted father of Valli was the ruler of the place.  Valli-Muruga wedding also took place here.  This is a famous temple in the Tamilnadu-Kerala border.

Special Features:
Miracle Based: Presiding deity Lord Muruga is 10 feet tall standing majestically. It is said Valli Kalyanam –Lord Muruga’s wedding with Valli- took place here.