If Anybody want to add or update temple details means please mail me at marthandamarea@gmail.com we will put it on this site.

Tuesday 3 February 2015

Mahabharatham Hisory | மகாபாரதம் உறுவான வரலாறு

மகாபாரதம் உறுவான வரலாறு..... 

 பாரதநாடு, பழம்பெரும் நாடாகும். இங்கு பல அறிஞர்களும், சாமான்யர்களும், புண்ணியவாதிகளும் பிறந்து அருள்புரிந்த நாடாகும். இத்தகு புண்ணிய கீர்த்திகளுள் மிகவும் முக்கியமானவர் பராசர முனிவரின் மகனான வியாசர் ஆவார். இந்த பூமியில் உள்ள வேதங்களை முறைப்படுத்திய பெருமைக்குரியவர் இவரே ஆவார். மகாபாரதம் என்கின்ற இந்தப் புண்ணிய இதிகாசத்தினை உலகத்திற்கு அளித்தவர் வியாசரே ஆவார்.நமது பண்பாட்டினை உணர்த்தும் இதிகாசங்கள் இரண்டு. அவை முறையே இராமாயணம், மகாபாரதம் ஆகும். இந்த மகாபாரதம் என்பது ரிக்,யஜூர், சாமம், அதர்வணம் என்கின்ற வேதங்களையும் அடுத்து விளக்கக் கூடிய ஐந்தாவது வேதமாக அனைவராலும் போற்றப்படுகின்ற அளவிற்கு இயற்றப்பட்டது ஆகும். இதிலே மனித வாழ்க்கையில் உண்டாகக் கூடிய அனைத்து விஷயங்களையும் மிகத் தெளிவாகவும், அழகாகவும் கூறிய பெருமை வியாசருக்கு உண்டு.இதனை நூல் வடிவில் கொண்டுவர வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டார் வியாசர். தாம் சொல்லச் சொல்ல இதனை யாரைக் கொண்டு எழுதச் செய்வது என்கின்ர எண்ணம் இவருக்கு உருவான போது பிரம்ம தேவரே இவருடைய மனத்திலே உதித்தார் பிரம்மனை நினைத்து வழிபட்டார். பிரம்மரும் அவர் முன் தோன்றினார்.வியாசர் தமது எண்ணத்தினை பிரம்ம தேவரிடம் வெளியிட்டார். பிரம்மர் வியாச முனிவரிடம், நீங்கள் கணபதியே வேண்டிக் கொள்ளுங்கள் உங்களுடைய எண்ணம் ஈடேறத் துணைபுரிவார். எனக்கூறி மறைந்தார். அதன் பொருட்டு வியாச முனிவர் கணபதியே நினைத்தார். கணபதியும் வியாசர் முன்பு தோன்றி அவர் தம் எண்ணத்தினை நிறைவேற்ற ஒப்புக் கொண்டார். வியாசர் ஒரு நிபந்தனையை விதித்தார். அதாவது தாம் சொல்லுகின்ற பாடலின் கருத்தின் பொருளை உணர்ந்தபடியே எழுதுதல் வேண்டும் என்பதாகும். இதற்கு விநாயகப்பெருமானும் சம்மதம் அளித்தார். வியாசர் பாடலாகச் சொல்ல, கணபதி பொருளினை யோசித்து யோசித்து எழுதத் துவங்கினார்.இதனால் கணபதி எழுதும் போது நேரங்கிடைத்ததால் விடாமல் வியாசரும் சிந்தித்த வண்ணம் தொடர்ந்து இடைவெளி விடாது சொல்ல முடிந்தது. இதற்குக் காரணம் வியாசர் அவ்வப்போது சில கடினமான வார்த்தைகளைப் போட்டதே காரணம் ஆகும்.இதனைக் கணபதி மேருமலையில் அமர்ந்து தமது வலது புற தந்தத்தினைக்கொண்டு எழுதினார். இவ்வாறுதான் மகாபாரதக் காவியம் உருவானது இதனைக் குறித்து தமது புத்திரரான சுகருக்கு வியாசர் கற்றுக் கொடுத்தார். நாரதர் இதனைக் கற்று தேவர்களுக்கு தெரியப்படுத்தினார். இவ்வாறாக மகாபாரதக் காவியம் பரவி மானிடர்களை சென்று அடைந்தது.வியாசரைத் தவிரவும் மகாபாரத்தினை வில்லிபுத்தூர் ஆழ்வார் எழுதியுள்ளார். இதனை வில்லிபாரதம் என அழைப்பார்கள். இவருக்கு பிறகு பலர் பாரதத்தினை தமது வடிவில் வடித்துள்ளார்கள். இவ்வாறுதான் மகாபாரதம் உருவானது. மகாபாரதத்தில் பல உன்னதமான பாத்திரங்கள் இருந்தாலும் கெளரவர்கல். பாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் போன்றோரே மிகவும் முக்கியப் பாத்திரர்களாகக் கருதப்பட்டனர். அக்காலம் முதல் இந்தக்காலம் வரையில் சொத்துச் சண்டையென்பது குடும்பத்திற்குக் குடும்பம் இருந்துக் கொண்டே இருக்கின்றது. இன்றும் இந்தச் சண்டையானது வலுப்பெற்றுக் கொண்டே வருகின்றது. ஆனால் தர்மம் என்பது இன்னது. அதர்மம் இன்னது என்கின்ற விவரங்கள் இதன் மூலமாகத்தான் தெரிய வருகின்றன. தருமத்தினை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்கிற ஓர் உணர்வினை இது உருவாக்கி உள்ளது. இதற்கு ஓர் நித்திய உதாரணமாக விளங்குவது மகாபாரதம் ஆகும். அன்று முதல் இன்று வரை ஏன் இந்த உலகம் உள்ளளவும் மிகப்பெரியதொரு இதிகாசமாக விளங்குவது மகாபாரதம் ஆகும். இப்படித்தான் மகாபாரதக் காவியம் உருவாகி முதலில் பாடலாகப் பிறந்தது. பின்னர் உரை நடையாக மாறி உலகத்தில் வேரூன்றி உள்ளது.இக்காவியம் நமது பாரத நாட்டின் பெருமையை உணர்த்தக்கூடிய நல்ல காவியம் ஆகும். நன்றி.
Copy and WIN : http://bit.ly/copynwinமகாபாரதம் உறுவான வரலாறு..... பாரதநாடு, பழம்பெரும் நாடாகும். இங்கு பல அறிஞர்களும், சாமான்யர்களும், புண்ணியவாதிகளும் பிறந்து அருள்புரிந்த நாடாகும். இத்தகு புண்ணிய கீர்த்திகளுள் மிகவும் முக்கியமானவர் பராசர முனிவரின் மகனான வியாசர் ஆவார். இந்த பூமியில் உள்ள வேதங்களை முறைப்படுத்திய பெருமைக்குரியவர் இவரே ஆவார். மகாபாரதம் என்கின்ற இந்தப் புண்ணிய இதிகாசத்தினை உலகத்திற்கு அளித்தவர் வியாசரே ஆவார்.நமது பண்பாட்டினை உணர்த்தும் இதிகாசங்கள் இரண்டு. அவை முறையே இராமாயணம், மகாபாரதம் ஆகும். இந்த மகாபாரதம் என்பது ரிக்,யஜூர், சாமம், அதர்வணம் என்கின்ற வேதங்களையும் அடுத்து விளக்கக் கூடிய ஐந்தாவது வேதமாக அனைவராலும் போற்றப்படுகின்ற அளவிற்கு இயற்றப்பட்டது ஆகும். இதிலே மனித வாழ்க்கையில் உண்டாகக் கூடிய அனைத்து விஷயங்களையும் மிகத் தெளிவாகவும், அழகாகவும் கூறிய பெருமை வியாசருக்கு உண்டு.இதனை நூல் வடிவில் கொண்டுவர வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டார் வியாசர். தாம் சொல்லச் சொல்ல இதனை யாரைக் கொண்டு எழுதச் செய்வது என்கின்ர எண்ணம் இவருக்கு உருவான போது பிரம்ம தேவரே இவருடைய மனத்திலே உதித்தார் பிரம்மனை நினைத்து வழிபட்டார். பிரம்மரும் அவர் முன் தோன்றினார்.வியாசர் தமது எண்ணத்தினை பிரம்ம தேவரிடம் வெளியிட்டார். பிரம்மர் வியாச முனிவரிடம், நீங்கள் கணபதியே வேண்டிக் கொள்ளுங்கள் உங்களுடைய எண்ணம் ஈடேறத் துணைபுரிவார். எனக்கூறி மறைந்தார். அதன் பொருட்டு வியாச முனிவர் கணபதியே நினைத்தார். கணபதியும் வியாசர் முன்பு தோன்றி அவர் தம் எண்ணத்தினை நிறைவேற்ற ஒப்புக் கொண்டார். வியாசர் ஒரு நிபந்தனையை விதித்தார். அதாவது தாம் சொல்லுகின்ற பாடலின் கருத்தின் பொருளை உணர்ந்தபடியே எழுதுதல் வேண்டும் என்பதாகும். இதற்கு விநாயகப்பெருமானும் சம்மதம் அளித்தார். வியாசர் பாடலாகச் சொல்ல, கணபதி பொருளினை யோசித்து யோசித்து எழுதத் துவங்கினார்.இதனால் கணபதி எழுதும் போது நேரங்கிடைத்ததால் விடாமல் வியாசரும் சிந்தித்த வண்ணம் தொடர்ந்து இடைவெளி விடாது சொல்ல முடிந்தது. இதற்குக் காரணம் வியாசர் அவ்வப்போது சில கடினமான வார்த்தைகளைப் போட்டதே காரணம் ஆகும்.இதனைக் கணபதி மேருமலையில் அமர்ந்து தமது வலது புற தந்தத்தினைக்கொண்டு எழுதினார். இவ்வாறுதான் மகாபாரதக் காவியம் உருவானது இதனைக் குறித்து தமது புத்திரரான சுகருக்கு வியாசர் கற்றுக் கொடுத்தார். நாரதர் இதனைக் கற்று தேவர்களுக்கு தெரியப்படுத்தினார். இவ்வாறாக மகாபாரதக் காவியம் பரவி மானிடர்களை சென்று அடைந்தது.வியாசரைத் தவிரவும் மகாபாரத்தினை வில்லிபுத்தூர் ஆழ்வார் எழுதியுள்ளார். இதனை வில்லிபாரதம் என அழைப்பார்கள். இவருக்கு பிறகு பலர் பாரதத்தினை தமது வடிவில் வடித்துள்ளார்கள். இவ்வாறுதான் மகாபாரதம் உருவானது. மகாபாரதத்தில் பல உன்னதமான பாத்திரங்கள் இருந்தாலும் கெளரவர்கல். பாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் போன்றோரே மிகவும் முக்கியப் பாத்திரர்களாகக் கருதப்பட்டனர். அக்காலம் முதல் இந்தக்காலம் வரையில் சொத்துச் சண்டையென்பது குடும்பத்திற்குக் குடும்பம் இருந்துக் கொண்டே இருக்கின்றது. இன்றும் இந்தச் சண்டையானது வலுப்பெற்றுக் கொண்டே வருகின்றது. ஆனால் தர்மம் என்பது இன்னது. அதர்மம் இன்னது என்கின்ற விவரங்கள் இதன் மூலமாகத்தான் தெரிய வருகின்றன. தருமத்தினை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்கிற ஓர் உணர்வினை இது உருவாக்கி உள்ளது. இதற்கு ஓர் நித்திய உதாரணமாக விளங்குவது மகாபாரதம் ஆகும். அன்று முதல் இன்று வரை ஏன் இந்த உலகம் உள்ளளவும் மிகப்பெரியதொரு இதிகாசமாக விளங்குவது மகாபாரதம் ஆகும். இப்படித்தான் மகாபாரதக் காவியம் உருவாகி முதலில் பாடலாகப் பிறந்தது. பின்னர் உரை நடையாக மாறி உலகத்தில் வேரூன்றி உள்ளது.இக்காவியம் நமது பாரத நாட்டின் பெருமையை உணர்த்தக்கூடிய நல்ல காவியம் ஆகும். நன்றி.

No comments:

Post a Comment